fbpx

“10,000 புடவைகள், 1,250 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம்..” இந்தியாவின் பணக்கார நடிகை யார்..? ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, இவர்களில் யாரும் இல்லை..!

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா உள்ளிட்டோர் இவரிடம் நெருங்க முடியாமல் திணறுகின்றனர்.

இந்திய திரையுலகில், அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற இடத்தை அடைவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஒட்டு மொத்த ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளுக்கு மட்டுமே, கோடிகளில் சம்பளத்தை வாரி வழங்குவார்கள். கோடிகளில் கல்லா கட்டிய ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், நயன்தாரா போன்ற நடிகைகள் கூட நெருங்க கூட முடியாத அளவுக்கு சொத்துக்களை சேர்த்தவர் ஜெயலலிதா.  60 மற்றும் 70-களில் முடி சூடாத ராணியாக திரையுலகில் வலம் வந்த ஜெயலலிதாவின். பணம், அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால், எந்த நடிகையுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகம் என கூறப்படுகிறது.

முன்னணி  நடிகையாக இருந்தபோதே.. MGR வழிகாட்டுதலால் தன்னுடைய  31வயதில், திரையுலகில் இருந்து விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த துவங்கினார். ஒரு அடிப்படை தொண்டராக களத்தில் இறங்கி கட்சி பணிகளை மேற்கொண்டார். இதுவே இவரின் படிப்படியான உயர்வுக்கு காரணமாகவும் அமைந்தது. 1997-ம் ஆண்டு, அவரது அரசியல் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில், ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 10,500 புடவைகள், 750 ஜோடி பாதணிகள், 91 கைக்கடிகாரங்கள், 800 கிலோ வெள்ளி மற்றும் 28 கிலோ தங்கம் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

2016ம் ஆண்டில், அவரது சொத்து மீதான மற்றொரு விசாரணையில், அவரது உலோக இருப்பு 1250 கிலோ என்றும்…  21கிலோ தங்கம், 42 கோடி மதிப்புள்ள சட்டப்பூர்வ அசையும் சொத்துகளுடன், 8 கார்களை வைத்துள்ளதாகவும், மொத்தத்தில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 900 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டது. 1980 இல், அவர் திரையுலகில் இருந்து விலகி அரசியலுக்கு வந்தார். 1991 முதல் 2016 வரை ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர். டிசம்பர் 2016ல் தனது 68வது வயதில் உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இவர் வைத்திருந்த புடவைகள், நகைகள், காலணிகள் உள்ளிட்டவற்றோடு மற்ற நடிகைகளான ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், நயன்தாரா ஆகியோரோடு ஒப்பிட முடியாது என்பதில் சந்தேகமில்லை

shyamala

Next Post

திறமைக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை! ஃபேவரைட்டிசமுக்கு தான் வாய்ப்பு-மனம் திறந்த நடிகை...

Tue Apr 23 , 2024
திரைத்துறையில் திறமைக்கு என்றுமே வாய்ப்புகள் கிடைப்பதில்லை என ஓபனாக தெரிவித்த நடிகை பரினீதி சோப்ரா. parineeti chopra: கடந்த 2011ம் ஆண்டு ‘Ladies vs Ricky Bahl’என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் நடிகை பரினீதி சோப்ரா அறிமுகமாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். Ishaqzaade’,’Golmaal Again’, ‘Shuddh Desi Romance’ என பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். அதேசமயம், பல தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளார். வெற்றிகளையும், பல சருக்கல்களையும் கண்டவர். […]

You May Like