fbpx

Power Tiller | பவர் டில்லர்களுக்கான மானியத்தொகை ரூ.1.20 லட்சமாக உயர்வு..!! சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார். அதில் விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.

* ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு.

* புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.

* சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.

* தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு.

* வரும் நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* ஆடு, மாடு, மீன் வளர்ப்போருக்கு கடன் வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* கன்னியாகுமரியில் சூரிய தோட்டம், செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச் செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

* தானியங்கி மின்னனு நீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 12,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

* ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.

* புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

* செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு

* மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.

* பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.

* விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு.

* 26,179 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு.

* பவர் டில்லர்களின் மானியத்தொகை ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

Afghanistan | பயங்கர நிலச்சரிவு..!! 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து 25 பேர் பலி..!! மீட்புப் பணிகள் தீவிரம்..!!

Tue Feb 20 , 2024
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். Afghanistan | ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. கிழக்கு ஆப்கான் பகுதியில் உள்ள நூர்காரத் பகுதியில் மொகானி கிராமத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் எதிரொலியாக நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளில் இருந்தவர்கள் […]

You May Like