ஜப்பானின் குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 6.3 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது இன்று பிற்பகல் 2.45 மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.