fbpx

Praggnanandhaa | ‘கருப்பு நிற காய்’..!! உஸ்பெகிஸ்தான் வீரரை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார் பிரக்ஞானந்தா..!!

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகின்றனர். இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டார். கருப்பு நிற காயுடன் ஆடிய பிரக்ஞானந்தா 56-வது நகர்த்தலில் அப்துசத்தரோவை தோற்கடித்தார்.

பிரக்ஞானந்தாவுக்கு இது 3-வது வெற்றியாகும். மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் டி. குகேஷ், விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தனர். 6 சுற்று முடிவில் நோடிர்பெக் அப்துசத்தரோவ் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரிச்சர்ட் ராப்போர்ட் (ஹங்கேரி), பர்ஹாம் மக்சூட்லூ (ஈரான்), பிரக்ஞானந்தா தலா 3½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

Read More : TVK Vijay | மகளிர் தினத்தன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!! விஜய் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு..!!

Chella

Next Post

PM Modi : 15,400 கோடி மதிப்பு..! நீருக்கு அடியில் முதல் மெட்ரோ ரயில்..! இன்று திறப்பு..!

Wed Mar 6 , 2024
PM Modi : மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா மைதானம் மற்றும் எஸ்பிளனேட் இடையே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று, கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை இதுவாகும். மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல இணைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். நாட்டின் உள்கட்டமைப்பு […]

You May Like