விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுகவின் 52-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “முதல்வர் ஸ்டாலின் சொன்னதெல்லாம் பொய். எடப்பாடி பழனிசாமி சொல்வதெல்லாம் உண்மை.
குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை இரண்டே முக்கால் ஆண்டுகள் கழித்து கொடுத்துள்ளனர். நீட் தேர்வில் பொய் நாடகம் நடத்துகின்றனர். டெல்லியில் அரசியல் செய்ய வேண்டும். பேசுவதெல்லாம் பொய், அனைத்தும் நடிப்பு, நாடகம் ஆடுகின்றனர். பாட்டாளி மக்கள், உழைப்பாளி மக்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் இரட்டை இலைக்கு வாய்ப்பு அளியுங்கள்.
சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரையே பிரதமராக கொண்டு வருவோம். எடப்பாடி அவர்கள் சொல்லுகின்ற பிரதமர் சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு ஒரு அற்புதமான தீர்ப்பை 40 தொகுதிகளிலும் தமிழ்நாட்டு மக்கள் வழங்க வேண்டும். எடப்பாடியாரின் கரம் ஓங்கினால் டெல்லியிலே எடப்பாடியார் சொல்லக் கூடியது நடக்கும்” என்று பேசினார்.