fbpx

பிரதமர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா..? முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி..!!

விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுகவின் 52-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “முதல்வர் ஸ்டாலின் சொன்னதெல்லாம் பொய். எடப்பாடி பழனிசாமி சொல்வதெல்லாம் உண்மை.

குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை இரண்டே முக்கால் ஆண்டுகள் கழித்து கொடுத்துள்ளனர். நீட் தேர்வில் பொய் நாடகம் நடத்துகின்றனர். டெல்லியில் அரசியல் செய்ய வேண்டும். பேசுவதெல்லாம் பொய், அனைத்தும் நடிப்பு, நாடகம் ஆடுகின்றனர். பாட்டாளி மக்கள், உழைப்பாளி மக்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் இரட்டை இலைக்கு வாய்ப்பு அளியுங்கள்.

சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரையே பிரதமராக கொண்டு வருவோம். எடப்பாடி அவர்கள் சொல்லுகின்ற பிரதமர் சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு ஒரு அற்புதமான தீர்ப்பை 40 தொகுதிகளிலும் தமிழ்நாட்டு மக்கள் வழங்க வேண்டும். எடப்பாடியாரின் கரம் ஓங்கினால் டெல்லியிலே எடப்பாடியார் சொல்லக் கூடியது நடக்கும்” என்று பேசினார்.

Chella

Next Post

’நாட்டை பிளவுபடுத்தும் சாதியை ஒழித்தே ஆக வேண்டும்’..!! பிரதமர் மோடி அனல் பறக்கும் பேச்சு..!!

Wed Oct 25 , 2023
டெல்லியில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது மேடையில் நடந்த ராமாயண நாடக நிகழ்ச்சியை கண்டுகளித்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஸ்ரீராமர் அயோத்திக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதாக, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை சுட்டிக்காட்டி பேசினார். நவராத்திரி கொண்டாட்டங்களில் ராவணனின் உருவ பொம்மைகளை […]

You May Like