fbpx

கவனம்…! நாளை காலை 10 மணி முதல்…! வேலை இல்லா இளைஞர்களுக்கு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…!

சேலம்‌ மாவட்டத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நாளை நடைபெறவுள்ளது.

சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்காடு பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சி.எஸ்‌.ஐ பல்வகை தொழில்நுட்பக்‌ கல்லூரி வளாகத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெறவுள்ளது.

இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு, மருத்துவம்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ உள்ள முன்னனி வேலையளிக்கும்‌ நிறுவனங்கள்‌ தங்களின்‌ காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்யவுள்‌ளனர்‌.

ஏற்காடு பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சி.எஸ்‌.ஐ பல்வகை தொழில்நுட்பக்‌ கல்லூரி வளாகத்தில்‌ 26 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 3 மணி வரை நடைபெறவிருக்கும்‌ இம்முகாமில்‌ 8ஆம்‌ வகுப்பு, 10 ஆம்‌ வகுப்பு, 12 ஆம்‌ வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல்‌, செவிலியர்‌, ஆசிரியர்‌, தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும்‌ கலந்துகொண்டு பயன்பெறலாம்‌.

Vignesh

Next Post

World Boxing Championship!... பைனலுக்குள் நுழைந்த 4 இந்திய வீராங்கனைகள்!... தங்கம் வெல்லும் முனைப்பு!

Sat Mar 25 , 2023
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன், லோவ்லினா போர்கோஹைன், நீது கங்காஸ் மற்றும் ஸ்வீட்டி பூரா நுழைந்துள்ளனர். தங்கப்பதக்கத்தை தட்டிச்செல்வார்களா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் டெல்லியில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நான்கு வெள்ளிப் பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் நான்கு தங்கப்பதக்கம் கிடைக்கும். நான்கு இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன் (50 கிலோ), லோவ்லினா […]

You May Like