பிரபல மொழியியலாளர் மற்றும் எழுத்தாளரான வெள்ளையணி அர்ஜுனன் காலமானார்.
மலையாள இலக்கியம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் தனது முக்கிய பங்களிப்பை வழங்கிய பிரபல மொழியியலாளர் மற்றும் எழுத்தாளரான வெள்ளையணி அர்ஜுனன் காலமானார். அவருக்கு வயது 90. வயது முதிர்வு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார்.
2008 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. டாக்டர் அர்ஜுனன், கலைக்களஞ்சிய நிறுவனத்தின் இயக்குநராக இருந்த காலத்தில், கேரளாவில் கலைக்களஞ்சியங்களை பிரபலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
மொழியியல் தொடர்பான பல புத்தகங்களை எழுதுவதோடு மட்டுமல்லாமல், பொது கலைக்களஞ்சியம் மற்றும் உலக இலக்கியத்தின் கலைக்களஞ்சியத்தை தயாரிப்பதிலும் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.