fbpx

வருமானத்திற்கு அதிகமான சொத்து..! அமைச்சருக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், அதிமுக தலைமையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. விசாரணையின்போது 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கின்பேரில் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததால் வழக்கு தொடர்ந்து நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து..! அமைச்சருக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதே புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முறையீடு செய்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அமலாக்கத்துறையின் இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தனர்.

Chella

Next Post

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு... வீட்டுக்கடன், வாகன கடன்களுக்கான வட்டியும் உயரும் அபாயம்..

Fri Aug 5 , 2022
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5% உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.. ரெப்போ என்பது வங்கிகளுக்கு தேவைப்படும் போது ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.. ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் இருந்து பெறும் கடன் விகிதம் ஆகும்.. இந்நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 0.5% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி […]

You May Like