fbpx

காதலனுடன் சேர்ந்து விபச்சார தொழில்..!! இளம்பெண்களை அடைத்து வைத்து பணம் சம்பாதித்த ஜோடி..!!

சென்னை எழும்பூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் இளம்பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விடுதியில் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அங்கு 3 இளம்பெண்களை அடைத்து வைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 3 பெண்களையும் மீட்ட போலீசார், விபச்சார தொழில் நடத்திய புதுச்சேரியைச் சேர்ந்த பெண் தரகர் ஜெயப்பிரதா (20), மற்றொரு தரகர் பிரேம்தாஸ் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட இளம்பெண்கள் 3 பேரும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதில் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. கைதான ஜெயப்பிரதா, சென்னையில் உள்ள பிரபல என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 3-வது ஆண்டு படிக்கும் மாணவி ஆவார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலனோடு சேர்ந்து விபச்சார தொழில் செய்து வந்ததாகவும், தற்போதுதான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர். இவர் ஓசை இல்லாமல் பணச்செலவுக்காக அப்பாவி கல்லூரி மாணவிகள் பலரையும், விபச்சாரம் செய்ய வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இவரது காதலன் போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Chella

Next Post

"புதுசு கண்ணா புதுசு"! தலைநகர் டெல்லியில் அதானிக்கு எதிரான புது முறையில் ஆர்ப்பாட்டம்!

Thu Mar 16 , 2023
அதானி விவகாரம் தொடர்பாக நாடெங்கிலும் சர்ச்சைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தலைநகர் டெல்லியில் இன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் பிபிசி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளி காட்சிகள் மூலம் அதானி குழுமம் செய்துள்ள மிகப்பெரிய மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க […]

You May Like