சென்னை எழும்பூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் இளம்பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விடுதியில் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அங்கு 3 இளம்பெண்களை அடைத்து வைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 3 பெண்களையும் மீட்ட போலீசார், விபச்சார தொழில் நடத்திய புதுச்சேரியைச் சேர்ந்த பெண் தரகர் ஜெயப்பிரதா (20), மற்றொரு தரகர் பிரேம்தாஸ் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட இளம்பெண்கள் 3 பேரும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதில் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. கைதான ஜெயப்பிரதா, சென்னையில் உள்ள பிரபல என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 3-வது ஆண்டு படிக்கும் மாணவி ஆவார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலனோடு சேர்ந்து விபச்சார தொழில் செய்து வந்ததாகவும், தற்போதுதான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர். இவர் ஓசை இல்லாமல் பணச்செலவுக்காக அப்பாவி கல்லூரி மாணவிகள் பலரையும், விபச்சாரம் செய்ய வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இவரது காதலன் போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.