தீபாவளி பண்டிகை வந்தாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். பட்டாசு என்றாலே சிவகாசி தான். இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டாசு சார்ந்த தீப்பெட்டி தொழில், அச்சு தொழிலும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சமீபகாலமாக பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்தனர்.
இதனைத் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சரவெடி உற்பத்தி பட்டாசு ஆலைகள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.