fbpx

’5 ஜி அலைக்கற்றை டவரால் பயங்கர ஆபத்து ’ ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்கள் எதிர்ப்பு ….

விருதுநகர் மாவட்டத்தில் 5ஜி அலைக்கற்றை டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணன் கோவில் பகுதி 33 வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க குழி தோண்டப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

மேலும் குடியிருப்பு பகுதிக்குள் அதிக அலைக்கற்றை 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்கப்படுவதால் கர்ப்பிணி பெண்கள் , குழந்தைகள் , குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து செல்போன் டவர் அமைக்காமல் இருக்க அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தம் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பின்னர் குடியிருப்பு வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Next Post

பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் !.. ஊர்ந்து ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..

Wed Oct 5 , 2022
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்கின்றன. சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜை என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்றுடன் விடுமுறை முடிவதால் மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்புகின்றார்கள். சென்னை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கார்கள் ,தனியார் […]

You May Like