fbpx

புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும்!… கல்வித்துறை அறிவிப்பு!

புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆண்டு தோறும் பள்ளி இறுதி தேர்வு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பள்ளி விடுமுறை தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்தநிலையில் இந்ததாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் பள்ளிகள் திறப்பு தேதி 7 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து கொண்டே இருந்ததால் பள்ளி மாணவர்கள் நலனை கருதி மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி தமிழகம் மற்றும் புதுவையில் தள்ளிவைக்கப்பட்டு ஜூன் 14 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்தநிலையில் பள்ளிகளுக்கு கூடுதலாக விடப்பட்ட விடுமறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரி பள்ளிக்கல்விதுறை சார்பாக எந்த எந்த சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி 9 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவித்துள்ளது. ஜூன் 24 ஆம் தேதி, ஜூலை 8 ஆம் தேதி, ஜூலை 22ஆம் தேதி, ஆகஸ்ட் 12 மற்றும் 26 ஆம் தேதி, செப்டம்பர் 9 மற்றும் 23 ஆம் தேதி, அக்டோபர் 14 மற்றும் 28 ஆம் தேதி அகிய நாட்களில் பள்ளிகள் செயல்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது.

Kokila

Next Post

‘கருவில் கரு’ அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்!... 36 ஆண்டுகளாக இரட்டை குழந்தையுடன் வாழ்ந்த ஆச்சரியம்!

Sat Jun 24 , 2023
மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் ‘கருவில் கரு’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த வர் சஞ்சு பக்த். 1963 இல் பிறந்த அவர் தனது பெரிய வயிற்றின் காரணமாக “கர்ப்பிணி” என்று அழைக்கப்படுகிறார். ஆனால், 36 வருடங்களாகத் தன் வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்துகொண்டிருப்பது அவருக்கு தெரியாது. சஞ்சு பகத்தின் வயிறு சிறு வயதில் இருந்தே பெரியதாக இருந்துள்ளது. தனது வயதுடைய குழந்தைகளை […]

You May Like