fbpx

சிகரெட் தராததால் ஆத்திரம்..!! MNC ஊழியரின் முகத்தை உடைத்த வாலிபர்..!! பரபரப்பு சம்பவம்..!!

டெல்லி மாநிலம் வார்கா பகுதியைச் சேர்ந்தவர் சௌரவ் வர்டாக். இவர் MNC நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த 2ஆம் தேதி மதியம் தனது அலுவலகம் அருகே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது பவண் என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். பின்னர் அவர் சௌரவ் வர்டாக் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து தனக்கு ஒரு சிகரெட் கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பவணை, சௌரவ் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பவண் அவரை பின்தொடர்ந்து வந்து அலுவலக வளாகத்திற்குள் புகுந்து சௌரவ் வர்டாக்கை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது தடுக்க வந்த அலுவலக காவலர்களையும் அடித்துள்ளார். இந்த தாக்குதலில் சௌரவ் வர்டாக்கின் மூக்கு உடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சௌரவ் வர்டாக் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து பவணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பவண் இப்படிதான் தேவையில்லாமல் அடிக்கடி யாரிடமாவது வேண்டுமென்றே மோதலில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Chella

Next Post

சக போலீஸ் மது அருந்துவதை மேலிடத்தில் போட்டுக்கொடுத்த போலீஸ்..!! 15 முறை சுட்டுக்கொன்ற கொடூரம்..!!

Tue Mar 7 , 2023
மது அருந்துவதை போட்டுக்கொடுத்ததால் ஆத்திரமடைந்த போலீசார், தன்னுடன் பணிபுரிந்த சக போலீசாரை சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் மிசோராமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் – அசாம் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது புர்சப் என்ற கிராமம். இந்த கிராமத்தில் சோதனைச் சாவடி ஒன்று உள்ளது. இந்த இடத்தில் லால்ரவ்லா, இந்திரகுமார் ராய், பிமல் கண்டி சுக்மா என 3 காவல்துறை அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குள் அடிக்கடி வாய்த்தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. […]
சக போலீஸ் மது அருந்துவதை மேலிடத்தில் போட்டுக்கொடுத்த போலீஸ்..!! 15 முறை சுட்டுக்கொன்ற கொடூரம்..!!

You May Like