fbpx

Rain | மக்களே செம குட் நியூஸ்..!! சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க வரும் மழை..!! 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..!!

தமிழ்நாட்டில் அடுத்த 5 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று (பிப்ரவரி 23) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் நாளை (24.02.2024) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், பிப்.25ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்.26 முதல் 28ஆம் தேதி வரை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்.29 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English Summary : Tamil Nadu to witness rains for the next 5 days

Read More : 1ஆம் தேதி முதல் இனி Gmail வேலை செய்யாது..? பயனர்கள் அதிர்ச்சி..!! கூகுள் நிறுவனம் பரபரப்பு தகவல்..!!

Chella

Next Post

மூல நோய் ஒரே வாரத்தில் குணமாக வாழைப்பழத்துடன் இதை கலந்து சாப்பிட்டு பாருங்கள்.!?

Fri Feb 23 , 2024
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் சுற்றுச்சூழலினாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினாலும் பலரும் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் மூலம் நோய் மிகப்பெரும் பாதிப்பாக இருந்து வருகிறது. இந்த நோயை குணப்படுத்த மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் மீண்டும் மூல நோய் உடலில் ஏற்படுகிறது. இவ்வாறு மீண்டும் வராமல் இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். மேலும் உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம், […]

You May Like