fbpx

Rain | தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!!

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 14 மற்றும் 15ஆம் தேதி, தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 16ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, கரூர் ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : ‘பாஜகவை எதிர்ப்பது போல் நடிப்பு’..!! அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழ்நாடு மக்கள் கட்சி..!!

Chella

Next Post

"பாஜக ஆட்சியின் முடிவுக்கான Count Down ஆரம்பமாகிவிட்டது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Fri Apr 12 , 2024
லோக்நிதி ஆய்வு அமைப்பு வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை குறிப்பிட்டு பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் ஆரம்பம் ஆகிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல லோக்நிதி ஆய்வு அமைப்பு,  2024 மக்களவைத் தேர்தல் களத்தின் முக்கியப் பிரச்னைகள் எவை என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. வேலைவாய்ப்பின்மை,  பணவீக்கம் உள்ளிட்டவை நாட்டின் முக்கிய பிரச்னைகளாக இருப்பதாக அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன […]

You May Like