fbpx

Rain | டெல்டா மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு சொன்ன குட் நியூஸ்..!! மகிழ்ச்சியில் மக்கள்..!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று, (ஏப்ரல் 1) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (ஏப்ரல் 2) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : ’இதுக்கு எதுக்கு கட்சியில இணையணும்’..!! ’பாஜகவில் இணைந்த 12 மணிநேரத்தில் விலகல்’..!! அப்செட்டில் அண்ணாமலை..!!

Chella

Next Post

Election 2024: "அதிமுக இல்லைனா பாஜக யாருக்கும் தெரிந்திருக்காது"… எடப்பாடி பழனிச்சாமி பதிலடி.!!

Mon Apr 1 , 2024
Election 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் பாண்டிச்சேரி உட்பட பல பகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த தேர்தல்களில்(Election) ஒரே அணியில் பயணித்த […]

You May Like