ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்’’ மாமன்னர் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் நவம்பர் 3ம் தேதி ஆண்டு தோறும் சதய விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து வரும் ஆண்டுகுளில் ராஜ ராஜ சோழன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் உள்ளது. இதனை மேம்படுத்து பொலிவூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த முதல்வருக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது என தெரிவித்த அவர் இதை ஏற்று நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ’’ மாமன்னர் ராஜ ராஜ சோழன் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு பா.ஜ.க. சார்பில் நன்றிகள் என அதில் குறிப்பிடப்பட்டது.