fbpx

”திருடர்களுக்கு ஆதரவு கொடுக்கும் ரஜினி”..!! ”ஏன் அரசியலுக்கு வரவில்லை”..? வெளுத்து வாங்கிய அமைச்சர் ரோஜா..!!

ரஜினிகாந்த் ஏன் திருடர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார் என்று ஆந்திர அமைச்சர் ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திராவில் கடந்த 2014 – 2019ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது, திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாநில குற்றப் புலனாய்வு துறை கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷிடம் தொலைபேசியில் பேசினார். “என்னுடைய நண்பர் (சந்திரபாபு நாயுடு) எந்தத் தவறையும் செய்திருக்க மாட்டார். பொய் வழக்குகள் அவரை எதுவும் செய்யாது. அவரது தன்னலமற்ற பொது சேவை அவரை நிச்சயமாக வெளியே கொண்டு வரும். தவறு செய்யாத உங்கள் தந்தை விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்” என்று ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நடிகை ரோஜா, “ரஜினி ஒரு புத்திசாலி. ஆனால், திருடர்களுக்கு ஏன் ஆறுதல் கூறுகிறார்? அவர் மீது இருந்த மரியாதை போய் விட்டது. மக்களுக்காக போராடி சிறை சென்றவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தால் அனைவரும் நல்ல விதமாகப் பேசுவார்கள். மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு ஆறுதல் கூறினால் என்ன அர்த்தம்? இதன் மூலம் மக்களுக்கு அவர் என்ன செய்தி சொல்ல வருகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மக்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பிருந்தும் ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லலை? என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியதற்கு எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியது என்பது அனைவருக்கும் தெரியும். சந்திரபாபு நாயுடு நல்லவர் என யாரும் நம்ப மாட்டார்கள். தவறு செய்தவர்களுக்கு தாமதமானாலும் தண்டனை கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞர்....! நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு...!

Thu Sep 14 , 2023
தற்போதைய காலகட்டத்தில், ஆண்கள், பெண்கள் என்று அனைவரும், ஒருவரை, ஒருவர் ஏமாற்றிக் கொள்வது வழக்கம் ஆகிவிட்டது. ஒருசில ஆண்கள், பெண்களையும், பெண்கள், ஆண்களையும் ஏமாற்றிவிட்டு சென்று விடுவதால், ஏமாற்றப்பட்டவர்கள் நிற்கதியாக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில், வசித்து வரும் ராம்குமார் என்பவர் அதே பகுதியில் ஒரு ஊராட்சிக்கு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், அவர் ஒரு இளம் பெண்ணுடன் […]

You May Like