fbpx

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறாரா ரஜினி..? திடீரென தூத்துக்குடிக்கு வந்தது ஏன்..?

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த இப்படம் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படி ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் சென்னை வெள்ளம் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளுக்கு நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்தார் ரஜினி. இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் திடீரென தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு ரஜினி ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்துள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்து வந்தது. ஆனால் உண்மையில் அவர் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புக்காக அங்கு சென்றுள்ளார். ரஜினி விமான நிலையம் வந்தபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

பகீர்.!! 16 வயது சிறுமி; 5 வருடம்; தொடர் பாலியல் வன்புணர்வு தந்தை, மகன் கைது.! 2 லட்ச ரூபாய்க்கு விற்ற உறவினர்.!

Tue Dec 26 , 2023
தந்தை மற்றும் மகனால் தொடர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்களிடமிருந்து தப்பி வந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தந்தை, மகன் மற்றும் அந்தப் பெண்ணின் உறவினர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பெண் தனது குடும்பத்தின் வறுமை […]

You May Like