fbpx

சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் ரஜினி..? சிறைத்துறையிடம் மனு..!!

சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளதாகவும், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆந்திரா சென்று சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014 – 2019 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்தார். அவரது பதவிக் காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவரை மாநில சிஐடி போலீசார், கடந்த 9ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ரோஜா கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்த் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். அதற்கான அனுமதி வழங்கப்பட்டால், அவர் இன்று சந்திரபாபு நாயுடுவை சந்திப்பார் என தெரிகிறது.

Chella

Next Post

இந்தியாவை சுத்துப்போடும் பாகிஸ்தான்..!! குவிக்கப்படும் அணு ஆயுதங்கள்..!! இவ்வளவு பக்கத்துலயா..?

Sun Sep 17 , 2023
அமெரிக்காவின் மூத்த அணு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானிடம் தற்போது 170 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த வேகத்தில் பாகிஸ்தான் தனது அணு ஆயுத கையிருப்பைத் தொடர்ந்து அதிகரித்தால், 2025ஆம் ஆண்டுக்குள் அந்நாட்டிடம் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அணு விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை ஒன்றில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் பாகிஸ்தான் நாட்டின் எந்தெந்த பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன […]

You May Like