fbpx

ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு … 11-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு 11-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சூரப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் தாயார் , தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் உதவியாக இருக்க ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நவம்பர் 17 முதல் 30 நாட்களுக்கு பரோல் வழங்கியது.

இதையடுத்து மதுரை சிறையில் இருந்த ரவிச்சந்திரன் .. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புன் தூத்துக்குடியில் தாயார் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் மீண்டும் பரோலை நீட்டிக் வேண்டம் என அடுத்தடுத்து மனு தாக்கல் செய்தார். இது 11வது முறையாக ரவிச்சந்திரன் பரோல் நீட்டிப்பில் வெளியில் உள்ளார். தற்போது அக்டோபர் 13-ம் தேதி வரை பரோலை நீட்டித்து சிறை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Next Post

இயக்குனர் சங்கர் படத்தில் மீண்டும் நடிக்கின்றார் எஸ்.ஜே.சூர்யா…… வில்லனாக நடிக்கின்றேன் என டுவீட்...

Mon Sep 12 , 2022
இயக்குநராக இருந்து நடிகராக மாறிய எஸ்ஜே. சூர்யா….. இயக்குனர் சங்கரின் ராம்சரன் நடிக்கும் படத்தில்  நடிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை தொடங்கிவிட்டதாகவும் ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துள்தாகவும் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “ நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தபோது இயக்குநர் ஷங்கர் படத்தின் செட்களை எட்டிப்பார்ப்பேன், பின் அவர் நண்பன் படத்தில் ஒரு கேமியோ செய்தேன், இப்போது அவர் […]

You May Like