fbpx

சித்தி 2 சீரியல் நடிகருடன் ராஜ்கிரண் மகள் காதல்திருமணம் ? .. நடிகர் ராஜ்கிரன் விளக்கம் …

சீரியல் நடிகரை காதலித்து அவருடன் சென்றுவிட்டதாக சமூக வலைத்தலங்களில் வெளியான செய்தி குறித்து நடிகர் ராஜ்கிரண் விளக்கமளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சீரியல் காமெடி நடிகர் முனீஸ் ராஜா. இவர் நாதஸ்வரம் , சித்தி 2 உள்ளிட்ட  சீரியல்களில் காமெடி ரோலில் நடித்தவர். இவரது நடிகர் ராஜ்கிரன் மகளை திருமணம் செய்து கொண்டதாக போட்டோக்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தலங்களில் உலா வந்தன. தந்தைக்கு தெரியாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டாரா ? என்பது போன்ற தகவல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் ராஜ்குமார் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில் ’’நான் என் மகளை சீரியல் நடிகர் ஒருவருடன் திருமணம் முடித்திருப்பதாக ஒரு தவறான தகவல் வந்தது. தற்போது இதில் உள்ள உண்மையை விளக்க வேண்டிய கடமையில் உள்ளேன். எனக்கு திப்பு சுல்தான் என்ற நைனார் முகமது என்ற ஒரே ஒரு மகன்தான் உள்ளார். இவரைத் தவிர வேறு வாரிசுகள் எனக்கு கிடையாது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா , சிறுவயதில் இருந்தே நான் வளர்த்து வந்தேன். அவளது சந்தோசத்திற்காகவே நான் ’’வளர்ப்பு மகள் ’’ என கூறாமல் மனம் கோண வேண்டாம் என்பதற்காகவே நான் மகள் என கூறி வந்தேன்.

இந்நிலையில் முகநூல் மூலமாக சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். அந்த பெண்ணை தன் வசப்படுத்தி கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். இது என் கவனத்திற்கு வந்தது. நான் அந்த நடிகரை பற்றி விசாரித்ததில் அவர் , மட்டமான புத்தி கொண்டவர் , பணத்துக்காக எதையும் செய்பவர், என தெரியவந்தது. அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில் இல்லை . நான் சினிமா துறையில் பெற்ற நல்ல பெயரை பயன்படுத்தி அவர் சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவது, என்னிடம் இருந்து பணம் பெறுவதுதான். எனவே இது பற்றி வளர்ப்பு மகள் பிரியாவிடம் கூறினேன் , அறிவுரை அளித்தேன். ஆனால் எதற்கும் செவி மடுக்கவில்லை. அவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். உங்கள் மகள் நான்தான் என நானோ அவரோ கூறமாட்டோம் என கூறினார். என் மனைவியும் இந்தக் கல்யாணம் வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொண்டார்.சரி மாப்பிள்ளை பாருங்கள் , உங்கள் விருப்பப்படி நான் திருமணம் செய்து கொள்கின்றேன். என்றாள். இந்நிலையில் என் மனைவியின் தோழி லட்சுமி பார்வதியை பார்த்துவிட்டு வருகின்றேன் என வீட்டை விட்டு கிளம்பினாள். ஆந்திராவுக்கு போய்விட்டதாக நினைத்தோம். ஆனால் 4 மாதங்களாக இன்னும் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வருகின்றது. என் மனைவிதான் இதற்கு காரணம் என பொய் தகவலை பரப்பி வருகின்றார். ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால் சாதி பேதம் பார்க்காத நான் , சந்தோசமாக கட்டிக் கொடுத்திருப்பேன். தரங்கட்ட , எதையும் செய்யத்துணியும் ஒருவனை நான் தேர்ந்தெடுத்து கட்டி வைக்க விரும்பவில்லை. தன் வாழ்க்கையை தானே நாசமாக்கிக் கொண்டாள். இவர்கள் உங்களை அணுகினால் நான் பொறுப்பாக மாட்டேன். யாரும் என் பெயரை பயன்படுத்த வேண்டாம் என கூறி உள்ளார். மேலும் எந்தக் காலத்திலும் எனக்கு மருமகனாக முடியாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளார்.

Next Post

ஒரே அறையில் அருகருகே இரண்டு கழிப்பிடம் ... ஏன் கட்டப்பட்டது ? மாநகராட்சி விளக்கம் …

Thu Sep 8 , 2022
ஒரே அறையில் இரண்டு கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்பாடற்ற நிலையில் இருப்பது குறித்து மாநகராச்சி பொறுப்பு ஆணையர் விளக்கமளித்துள்ளார். கோவை மாவட்டம் அம்மன் குளம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கழிவறை கட்டப்பட்டது. இந்த கழிவறைக்கு கதவுகள் இல்லை. ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் கட்டப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. பயன்பாடற்ற நிலையில் பல ஆண்டுகளாக கிடந்த இந்த கழிவறை கேள்விக்கு […]

You May Like