fbpx

ரூ.50 கோடி விருந்து செலவை ஏற்கும் நடிகர் பிரபாஸ்? ராமர் கோவில் கும்பாபிஷேகம்!…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான விருந்து செலவை நடிகர் பிரபாஸ் ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார். இதற்காக சடங்குகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. மைசூரு சிற்பி தயாரித்த குழந்தை ராமர் சிலை அயோத்திக்கு கொண்டுவரப்பட்டு நேற்று கருவறையில் நிறுவப்பட்டது. மேலும், ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஆலியா பட், ரன்பீர், ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின், உள்ளிட்ட சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 22 -ம் திகதி நடைபெற இருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது முதல் நாள் விருந்து செலவு அனைத்தையும் நடிகர் பிரபாஸ் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. முதல் நாளில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், வெளிநாட்டு அதிகாரிகள் என சுமார் 800 பேர் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், அன்று ஒரு நாள் விருந்து செலவு மட்டும் ரூ.50 கோடி வரை ஆகலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவை நடிகர் பிரபாஸ் ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், பல சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் பிரபாஸுக்கு கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Kokila

Next Post

பிரதமரின் வருகைக்காக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு..!! திருச்சியில் அவலம்..!!

Sat Jan 20 , 2024
அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, விரதம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில், நேற்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்த அவர், இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். எனவே, திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி நகர் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இரவு பகல் பாராமல் நூற்றுக்கணக்கில் தூய்மை […]

You May Like