fbpx

ஆற்றில் குளித்த சிறுமி உள்பட 3 பேர் பலி … ராணிப்பேட்டை அருகே பரிதாபம்…

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அருகே அரக்கோணம் கொசஸ்தலை ஆற்றில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரசூல் , பரிதாபானு, பவுசியா (13) ஆகியோர் ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு முதலுதவி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் மயக்கநிலையில் இருந்து மீளவில்லை. எப்படியாவது அவரது உயிரை காப்பாற்றிவிடலாம் என நினைத்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களே சோகத்தில் மூழ்கினர்.

Next Post

தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ரத்து.. ஓ.பி.எஸ்.கண்டனம்

Sun Sep 4 , 2022
தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை அரசு ரத்து செய்ததற்கு ஓ.பி.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பிரிவு சிறப்பாக நடைபெறுவதற்கான உரிய நடிவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’’உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் , வீணில் உண்டு களித்திருப்போரைநிந்தனை செய்வோம் ’’ என்று கூறிய பாரதியார் பொருளாதாரத்தில் ஒரு […]

You May Like