fbpx

நாளையும் (டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக வரும் 17ஆம் தேதி சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் 4 மாவட்டங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6,000 நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தது.

இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதற்கு ஏதுவாக வரும் 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் எந்தெந்த இடங்களில் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது என்பது தொடர்பான அரசாணை கடந்த 13ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஒரு வாரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு..? வெளியாகவிருக்கும் அறிவிப்பு..!!

Sat Dec 16 , 2023
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2, 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் சார்பில் கடந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. இதற்கான முதல்நிலை தேர்வுகள் முடிந்து, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என […]

You May Like