கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக மாறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தின் போது நிரந்தர பொதுச்செயலாளர் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, பாஜக கூட்டணி விவகாரம் போன்றவைகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.