fbpx

அடுத்த அதிரடிக்கு தயாராகும் எடப்பாடி..!! நிரந்த பொதுச்செயலாளர்..!! இன்று கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக மாறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தின் போது நிரந்தர பொதுச்செயலாளர் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, பாஜக கூட்டணி விவகாரம் போன்றவைகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தங்கம் விலை இன்றும் குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

Thu Mar 9 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41,240க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

You May Like