fbpx

மக்களே…! கிரெடிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் புக் செய்தால் 7 நாட்களில் ரீஃபண்ட்…! மத்திய அமைச்சர் தகவல்

ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய, ஏற்கனவே உள்ள ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணச்சீட்டு தானாகவே ரத்து செய்யப்பட்டு, ஆட்டோ ரீஃபண்ட் எனப்படும் திருப்பிச் செலுத்துதல் நடைமுறையின் மூலம் வங்கிக் கணக்கிற்கு பணம் திரும்பச் செலுத்தப்படுகிறது.

பணம் எடுக்கப்பட்டு முன்பதிவு செய்யப்படாவிட்டால், ஐ.ஆர்.சி.டி.சி மறுநாள் தானியங்கி முறையில் பணத்தைத் திரும்பப் பெறும் செயல் முறையைத் தொடங்குகிறது. பொதுவாக பின் வரும் பரிவர்த்தனை முறையின்படி பணம் திரும்பப் பெறுவதற்கான கால அளவு அமையும்.நெட் பேங்க்கிங்,வாலட் அல்லது கேஷ் அட்டைப் பரிவர்த்தனைகளுக்கு 3 முதல் 4 வேலை நாட்கள் ஆகும். கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 6 முதல் 7 வேலை நாட்கள் ஆகும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

மருந்து அட்டைகளில் QR CODE..! விலை அதிகரிக்கப்படுமா..? தயாராகும் முன்னணி நிறுவனங்கள்…

Thu Aug 3 , 2023
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்படுகிறது. இருந்தாலும் சந்தையில் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கவும் முன்னணி நிறுவன பெயரிலான மருந்தின் தரத்தை உறுதி செய்வதற்காகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து மருந்து நிறுவனங்களும் மருந்து அட்டைகளில் க்யூ.ஆர் கோடை பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு […]

You May Like