fbpx

வேறொரு பெண்ணுடன் தொடர்பா..? ஆர்த்தியை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா..? மவுனம் கலைத்த ஜெயம் ரவி..!!

பிரதர் பட புரமோஷனுக்காக ஜெயம் ரவி பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். அப்போது, செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ”சில மாதங்களுக்கு முன்பாகவே விவாகரத்து பெரும் முடிவில் இருந்தேன். இரண்டு முறை ஆர்த்திக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினேன். இரண்டு மகன்களும் என்னிடம் தான் இருக்கின்றனர்.

மூத்த மகனிடம் விவாகரத்தை பற்றி பேசியபோது மற்ற குழந்தைகள் போல இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தான். என்னுடைய பெற்றோர்களிடம் பேசிய போது அவர்கள் என் விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதுவரையும் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்த என் மீது தவறான தகவல் வந்து கொண்டிருக்கிறது. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக பேசுவது தவறான செயல். ஆதரவற்ற அந்தப் பெண் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாங்கள் ஆன்மீக மையம் ஒன்று அமைக்க இருந்தோம்.

என்னுடைய விவாகரத்தில் வேறு ஒருவரை பற்றி இணைத்து பேசுவது எனக்கு பிடிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார். ஜெயம் ரவியின் இந்த பேட்டிக்கு பிறகு ஆர்த்தி சொல்வது உண்மையா, இல்லை ஜெயம் ரவி சொல்வது உண்மையா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆர்த்தி தான் முதலில் தனது இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கியிருந்தார். அதன் பிறகு முதலில் ஜெயம் ரவி மீது குற்றச்சாட்டையும் ஆர்த்தி தான் வைத்திருக்கிறார். இப்போது தன் மீது விழுந்த பழிக்கு ஜெயம் ரவி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Read More : ’சுயமரியாதையை பற்றி பேச ஆரம்பித்தால் எந்த தயாரிப்பாளராலும் படம் எடுக்க முடியாது’..!! மணிமேகலையை வறுத்தெடுக்கும் ரவீந்தர்..!!

English Summary

I don’t like talking about someone else in my divorce

Chella

Next Post

தவறாக பயன்படுத்தப்படும் ஆதார் எண்கள்..!! உங்களுக்கும் சந்தேகம் இருக்கா..? உடனே செக் பண்ணுங்க..!!

Sat Sep 21 , 2024
If you suspect that your Aadhaar number is being misused, you can check it online from home.

You May Like