fbpx

இடுகாட்டுக்கு சாலை வசதி இல்லாததால், இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்….! கோரிக்கை வைத்தும், கண்டுகொள்ளாத திமுக ஊராட்சி மன்ற தலைவர்….!

திண்டுக்கல் அருகே, இறந்தவர்களை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு கூட வழியில்லாமல், இடுப்பளவு நீரில், இறந்தவர்களின் சடலத்தை சுமந்து சென்று, அடக்கம் செய்யும் கிராம மக்களின் பரிதாப நினைவை பற்றி, ஊராட்சி மன்ற தலைவருக்கு கோரிக்கை வைத்தும், அவர் கண்டு கொள்ளாததால், அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகே இருக்கின்ற, முள்ளிப்பாடி கிராமம் செட்டியப்பட்டியில், சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியில், இருக்கின்ற மக்களில், யாராவது, உயிர்நீத்தால், அவர்களை, அந்த பகுதியில் உள்ள சந்தனவர்தினி ஆற்று படுகை அருகே இருக்கின்ற இடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

ஆனால், இடுகாட்டிற்கு செல்லும் வழி சரியாக இல்லை, இடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அந்த ஆற்றுக்கு நடுவே நீரோடை குறுக்கிடுகிறது. ஆகவே அந்த நீரோடையில், இறங்கி, இறந்தவர்களின் உடலை சுமந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சீரமைத்து கொடுக்குமாறு தற்போது இருக்கின்ற திமுகவின் ஊராட்சி மன்ற தலைவர் மாதவி காமராஜ் மற்றும் இதற்கு முன்பாக இருந்த பல ஊராட்சி தலைவர்களிடமும், அந்தப் பகுதி மக்கள் முறையிட்டதாக தெரிகிறது. ஆனாலும். இதுவரையில், அவர்கள் யாரும், எந்த விதமான நடவடிக்கையும், மேற்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான், அந்தப் பகுதியைச் சேர்ந்த அழகம்மாள் என்ற மூதாட்டி நேற்று இயற்கை எய்தினார். ஆகவே, அவரை அடக்கம் செய்வதற்காக, அவருடைய சடலத்தை எடுத்துச் சென்ற அவருடைய உறவினர்கள், சந்தனவர்தினி ஆற்றுப்படுதையில், இருக்கின்ற குளத்தில், இடுப்பளவு நீரில், அழகம்மாளின் உடலை சுமந்து சென்று, அடக்கம் செய்து வந்தனர்.

மெட்ரோ, நூறடி சாலை, தேசிய நெடுஞ்சாலை பறக்கும் சாலை, இணைய வசதி என்று பலவற்றிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகின்ற நிலையில், இன்றளவும், இடுகாட்டிற்கு செல்லும் வழியை கூட, சரியாக ஏற்படுத்திக் கொடுக்க ஆள் இல்லாத கிராமமும் இருக்கிறது என்பதை நினைத்தால், சற்றே வேதனையாக தான் இருக்கிறது.

Next Post

பாத்திமா, லாஸ்லியா, அனிதாவை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் ஆண் செய்தி வாசிப்பாளர்..!! யாருன்னு தெரியுமா..?

Thu Aug 17 , 2023
சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து 7-வது சீசன் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனால், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகும் போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றி இணையத்தில் நெட்டிசன்கள் கணித்து வருகின்றன. அதிலும், இதற்கு முந்தைய சீசனில் ஒரு செய்தி வாசிப்பாளரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்து அவர்களை பிரபலமாக்கி விடுவார்கள். […]

You May Like