fbpx

“ஏன் இப்படிலாம் தரக்குறைவா பேசுறீங்க? தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளியுங்கள்” : ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்!

பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் என்று ஜி.வி.பிரகாஷ் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ஜி.வி பிரகாஷ், சைந்தவி ஜோடி பிரியப் போவதாக தகவல்கள் கசிந்து பரபரப்பை கிளப்பின. இந்நிலையில் நேற்று (மே 14) சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜி.வி.பிரகாஷை விட்டு பிரியவுள்ளதாக அறிவித்தார். அதேபோல், ஜி.வி பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளபக்கத்தில் அதிகாரபூர்வமாக இதனை அறிவித்தார்.

நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகின. நெட்டிசன்கள் முதல் பல பிரபலங்கள் இந்த விவகாரம் தொடர்பான தங்கள் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தனர். தயாரிப்பாளர் கே. ராஜன், பயில்வான் ரங்கநாதன், பிஸ்மி என பலர் இந்த விவாகரத்தை எடுத்து அதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது அதற்கு முடிவு கட்டும் விதமாக ஒரு அறிக்கையை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா…? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கு அறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம்.

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


Read More ; சூரிய வெடிப்பை படம் பிடித்த ஆதித்யா எல்-1 : இந்திய செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பா? ISRO சொன்ன புதிய தகவல்!

Next Post

EPFO கணக்கில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்..!! உங்களுக்கு சேர்ந்துவிட்டதா..? எப்படி தெரிந்து கொள்வது..?

Wed May 15 , 2024
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் சேர்ந்துவிட்டதா? என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதை பார்க்கலாம். EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாக பார்க்கப்படுகிறது. மாதச் சம்பளம் பெறும் ஊழியரின் சம்பளத்தில் ஒரு பகுதி இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் செல்கிறது. அதே தொகையை அவர்களது நிறுவனமும் பங்களிக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கும், பணியாளர் […]

You May Like