பார்ச்சூன் இந்தியா 2023ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. முதலிடத்தில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 99.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இரண்டாம் இடத்தில் அதானி குழும நிறுவனங்களின் தலைவரான கவுதம் அதானி இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 63.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
மூன்றாம் இடத்தில் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் மிஸ்திரி குடும்பம் உள்ளது. இவர்களது சொத்து மதிப்பு 34.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது இடத்தில் தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளர்களான பூனாவல்லா குடும்பம் உள்ளது. இவர்களுக்கு 32.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துக்கள் உள்ளது. மேலும், 5-வது இடத்தில் பங்குத் தரகரும், டி-மார்ட் வணிக நிறுவனத்தின் தலைவரான ராதாகிஷன் தமானி இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 23.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
மேலும், ஷிவ் நாடார் குடும்பம், அசிம் பிரேம்ஜி, கோத்ரேஜ், பஜாஜ் மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து ஜியோ ஃபைனான்ஸ் நிறுவனத்தை பிரித்து தனியாக பட்டியலிட்டுள்ளது ரிலையன்ஸ் குழுமம். இதன் மூலம் எதிர்காலத்தில் அதன் பங்குதாரர்களின் செல்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, ஆதானி குழும பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இந்த குற்றச்சாட்டை மறுத்த அதானி குழுமம், விளம்பரதாரர் மட்டத்தில் கடனை முன்கூட்டியே செலுத்த பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்றது. இந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து, அதானியின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் பங்குகள் மீண்டு வந்துள்ளன. இருப்பினும் அவை கடந்தாண்டு செப்டம்பரில் எட்டிய உச்சத்தை விட கீழேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.