அக்டோபர் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம், விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இரு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். 2 வாரங்களை கடந்து 3-வது வாரத்தை எட்டியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை விறு விறுப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம் கமல்ஹாசன் டாஸ்க் பற்றி பேசுறாரு. டாஸ்க் நடக்கும்போது அங்கு இடம் பெறும் வன்முறைகள் தாெடர்பாக பேசுறாரு. அடுத்தகட்டமாக இந்த வார கேப்டன் யுகேந்திரனை யாரும் மதிக்கவில்லை என அது பற்றி பேசுகிறார். விஜய் கேம் விளையாடும் போது பிரதீப்பை தூக்கி கீழே தள்ளியது, அதிக தவறான விதிமுறைகளை பின்பற்றியதால் 2-வது முறையாக விஜய்க்கு ஸ்ரைக் கொடுக்கிறாரு. பின்னர் முதல் தடவையாகவே பிரதீப், நிக்ஸன் இருவரையும் காப்பத்துறாரு இது தான் இன்றைய தினம் நடக்கப்போகிறது.