fbpx

மனைவியை வீட்டிற்க்கு வரவைக்க, ரவுடி செய்த காரியம்; போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..

பெரம்பலூர் மாவட்டம், உசேன் நகரம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் 33 வயதான சந்தோஷ்குமார். பிரபல ரவுடியான இவருக்கு, 26 வயதான ராதிகா என்ற மனைவியும், 6 வயதான பவித்ரா என்ற மகளும், 4 வயதான விஷ்வா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் இருவரும் சந்தோஷ்குமார் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தனது மனைவியை வீட்டிற்க்கு அழைக்க அவருக்கு வீடியோ காலில் பேசியுள்ளார்.

அப்போது அவர் தனது மகன் விஷ்வாவை கொலை செய்து விடுவதாக ராதிகாவை மிரட்டியுள்ளார். இது தொடர்பான 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா, இது குறித்து குன்னம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தோஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தந்தையே தனது மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Maha

Next Post

அதிர்ச்சி..!! இஸ்ரேல் பாதுகாப்பு படை தளபதியை சுட்டுக்கொன்ற ஹமாஸ் அமைப்பு..!! தொடரும் தாக்குதல்..!!

Sun Oct 8 , 2023
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் நஹால் படைப்பிரிவின் தளபதி ஜொனாதன் ஸ்டெய்ன்பெர்க் என்பவர் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய படைப்பிரிவான நஹாலின் கட்டளை தளபதி கர்னல் ஜொனாதன் ஸ்டெய்ன்பெர்க் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையே உள்ள முள்கம்பி வேலி எல்லையை கடந்து ஹமாஸ் […]

You May Like