மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் 7 குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு 1 கோடி ரூபாய் பரிசு (இந்திய மதிப்பில் சுமார் 1200000 ரூபாய்) வழங்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரானா பாதிப்பால் அங்கு மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. இந்த பாதிப்பால் சீனா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு இன்னல்களை சந்தித்தது. அந்தவகையில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் புதிய அறிவிப்பை சீன அரசு வெளியிட்டுள்ளது. அதில், குறைந்து வரும் மக்கள் தொகையை அதிகரிக்க “நியூ இரா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 7 குழந்தைகள் பெற்றால் சமூக ஆதரவாக 150000 டாலர் வழங்கப்படவுள்ளதாம். இதை சீனாவில் முதலில் 20 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் காதல் விடுமுறை, திருமண உதவித் தொகை, மூன்றாவது குழந்தை பிறந்தால் ஊக்கத் தொகை போன்ற பல திட்டங்களை சீனாவின் குடும்ப கட்டுப்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.