fbpx

புதிய கவர்னர் கையெழுத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டு..!! விரைவில் உங்கள் கைக்கு வரும்..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியானது. அந்த நேரத்தில் இந்த அறிவிப்பு நாட்டையே உலுக்கிப் போட்டது. அதன் பிறகு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. பெரிய நோட்டுகளால் கருப்புப் பணம் பெருகும் என நினைத்து, ரூ.1000 நோட்டை விட பெரிய ரூ.2000 நோட்டை ரிசர்வ் வங்கி கொண்டு வந்ததன் காரணம் மக்களுக்கு புரியவில்லை.

அதன் பிறகும் புதிய ரூ.200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. கரன்சி நோட்டுகளில் மாற்றம் செய்வதால் திருடப்பட்ட ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2023ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மீண்டும் ரிசர்வ் வங்கி எடுத்தது. அதன்படி, புழக்கத்தில் உள்ள மிகப்பெரிய கரன்சி நோட்டு ரூ. 2,000 நோட்டு வாபஸ் பெறத் தொடங்கியது. 2016-ம் ஆண்டு போல் ரூ.2000 நோட்டை ஒரேயடியாக ரத்து செய்யாமல் வாபஸ் பெறத் தொடங்கியது. அவற்றை புழக்கத்தில் வைத்துக்கொண்டு வங்கிகளுக்கு வருவதை நிறுத்த உத்தரவிட்டது. 2024ஆம் ஆண்டின் இறுதியில், கிட்டத்தட்ட 2000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்துவிட்டன.

இந்நிலையில், சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, புதிய கவர்னர் கையெழுத்திட்ட ரூ.50 நோட்டு அறிமுகம் செய்ததுடன், ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து அதிரடி காட்டினார். இந்நிலையில், கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Read More : ரேபிஸ் நோயால் ஆக்ரோஷமான நபர்..!! ஜன்னல் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்து தற்கொலை..!! கோவையில் அதிர்ச்சி..!!

English Summary

The Reserve Bank has officially announced that new Rs.100 and Rs.200 notes have been printed.

Chella

Next Post

இனி வயது வாரியாக கூடுதல் ஓய்வூதியம் – மத்திய அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

Wed Mar 12 , 2025
Age-wise additional pension now – Happy announcement from the Central Government!

You May Like