fbpx

இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை!… டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு!… விவரம் உள்ளே!

பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு கடலோர பகுதி மீனவர்களின் வாரிசுகளுக்கு பயிற்சி துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி, பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொதை வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு நூறு மீனவ இளைஞர்களை இந்திய கப்பற்படையில் சேர்ப்பது எங்கள் இலக்கு எனவும் தெரிவித்தார்.

மேலும், இரவு நேர சோதனையில் இலக்கு ஏதும் நிர்ணயிக்கவில்லை என்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்டறிய நவீன கருவி வழங்கப்படுகிறது. இயந்திரத்தில் தவறு இருந்தால், புதிய இயந்திரம் மாற்றப்படும் எனவும் கூறினார்.

Kokila

Next Post

8 மற்றும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்புகள்! உடனே விண்ணப்பிக்கவும்!

Thu Mar 30 , 2023
விருதுநகர் மாவட்டத்தின் நல்வாழ்வு சங்கத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 4 காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் மருத்துவ பணியாளர் பணிக்கு 2 காலியிடங்களும் வாகன ஓட்டுனர் பணிக்கு 1 காலியிடமும் துப்புரவாளர் பணிக்கு ஒரு காலியிடமும் உள்ளது. இவற்றை […]

You May Like