fbpx

ரூ.2,000 கோடி போதைப் பொருள்..!! ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டியது தொடர்பான வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், டெல்லியில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழ்நாட்டை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த அவர், டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரின் நீதிமன்ற காவல் மே 29ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More : அமைச்சரின் உதவியாளர் வீட்டில் குவியல் குவியலாக பணம்..!! ரூ.30 கோடியாம்..!! அதிர்ந்துபோன அமலாக்கத்துறை..!!

Chella

Next Post

கன்னியாகுமரி ; கடலில் மூழ்கி மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி.. சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த விபரீதம்! 

Mon May 6 , 2024
கன்னியாகுமரி அருகே கணபதிபுரத்தில்  கடலில் குளித்த இரண்டு மாணவிகள் உட்பட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர்  கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 12 பேர் நாகர்கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக நேற்று நாகர்கோயில் வந்துள்ளனர். இன்று காலை பிரபல சுற்றுலா தளமாக […]

You May Like