fbpx

ரூ.4 கோடி விவகாரம்… விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை…! தமிழக தேர்தல் ஆணையர் தகவல்…!

தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நயினார் நாகேந்திரன் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்; நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட ரூ.4 கோடி பணம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எது மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முடிவு எடுக்கும். தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்; ஓவர் லோடு காரணமாகவே கண்காணிப்பு கேமராவில் பழுது ஏற்பட்டது. பின்னர் அது உடனடியாக சரி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா ஓவர் லோடு ஆகாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Vignesh

Next Post

10 ஆண்டு சிறையை எதிர்த்து நிர்மலாதேவி மேல்முறையீடு - இன்று விசாரணை

Wed May 8 , 2024
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக நிர்மலாதேவி பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு […]

You May Like