fbpx

கழிப்பறைக்கு செல்ல ஒரு ரூபாய்க்கு பதில் ரூ.5 வசூல்..!! ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!!

கழிப்பறைக்கு செல்ல கூடுதல் கட்டணம் வசூலித்த வழக்கில் ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த சுந்தரம் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அங்கு சிறுநீர் கழிக்க கட்டணமாக ஒரு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு ரூபாய்க்கு பதிலாக 5 ரூபாய் வாங்கியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் சுந்தரம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 5 ரூபாயில் 4 ரூபாயை திரும்ப தரவும், 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும், மேலும் வழக்கு செலவு ரூ.10,000 வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதை நகராட்சி ஆணையாளர் மற்றும் குத்தகைதாரர் இருவரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குறைதீர் ஆணைய நீதிபதி சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

இந்த வார நாமினேஷனில் சிக்கிய டஃப் போட்டியாளர்கள்..!! டைட்டில் வின்னர் தப்பிச்சிட்டாரு..!!

Mon Nov 20 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி 50 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. இந்நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்கள் இடையே சண்டையை மூட்டிவிடும் வகையில் பல விதமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ். அந்த வகையில், இந்த வாரம் அவர் கொடுத்த டாஸ்க்கால் பிக்பாஸ் வீடே பேரதிர்ச்சியில் மூழ்கி உள்ளது. ஏனென்றால், இந்த வாரம் மேலும் 3 வைல்டு கார்டு எண்ட்ரி உள்ளே வர உள்ளார்களாம். வைல்டு கார்டு எண்ட்ரியாக […]

You May Like