fbpx

மாதந்தோறும் ரூ.6 லட்சம் லஞ்சம்..!! தட்டிக்கேட்ட கணவர் மீது வரதட்சணை புகார் கொடுத்த பெண் ஐஏஎஸ் ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பதவியில் இருப்பவர் ஜோதி மவுர்யா. ஐஏஎஸ் அதிகாரியான இவரது கணவர் அலோக் மவுர்யா, பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர். உ.பி. மாநில பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஊர்க்காவல் துறை டிஐஜி வி.கே. மவுர்யாவிடம், அலோக் மவுர்யா சமீபத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ஜோதிக்கும் எனக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமானது.

ஜோதி ஐஏஎஸ் படிக்க நான் உதவி செய்தேன். இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 16-வது இடத்திலும், பெண்கள் பிரிவில் 3-வது இடத்திலும் ஜோதி மவுர்யா தேர்ச்சி பெற்று அதிகாரியானார். 2015ஆம் ஆண்டு எங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 2019 வரை எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது. அதன் பிறகு ஜோதியின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மாதம்தோறும் சுமார் ரூ.6 லட்சம் அளவுக்கு அவர் லஞ்சம் வாங்கியுள்ளார். இதை அவரே தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் 2020ஆம் ஆண்டு காஜியாபாத் ஊர்க்காவல் படை மாவட்ட கமாண்டண்டுடன் நட்பு ரீதியாக ஜோதி பழகி வந்துள்ளார். இதுதொடர்பாக நான் கேள்வி கேட்டபோது உடல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். இந்நிலையில், கடந்த வாரம் எனக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது. உடனடியாக ஜோதியிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டு அமைதியாக சென்றுவிடுமாறு என்னை சிலர் மிரட்டினர். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்” இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதற்கிடையே, ஜோதி மவுர்யா தனது கணவர் மீது வரதட்சணை கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

Chella

Next Post

தொடர் கனமழை..!! 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!! குஷியில் மாணவர்கள்..!!

Wed Jul 5 , 2023
கனமழை காரணமாக கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இராணி தாலுக்காவில் உள்ள குரும்பன்மொழி பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் 250 ஆதிவாசி குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மணியார் அணை திறக்கப்பட்டுள்ளதால், பம்பை நதி, கக்கட்டாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொடர் கனமழையால் கண்ணூர், திருசூர், கோட்டயம் மாவட்டங்களில் பள்ளி, […]

You May Like