போதை கடத்தல் மூலம் வந்த பணத்தில் 7 லட்சத்தை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்ததாக சாதிக் அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது..
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக பிரமுகருமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். போதை கடத்தல் மூலம் வந்த பணத்தில் 7 லட்சத்தை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்ததாக சாதிக் என்சிபியிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சனிக்கிழமையன்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.7 லட்சம் கொடுத்ததாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது உதவுவதற்காக உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், மீதமுள்ள ரூ.2 லட்சத்தை கட்சிக்காக வழங்கியதாகவும் அதிகாரிகளிடம் சாதிக் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.