fbpx

மகன் இறந்த சோகம்..!! அதே ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்..!!

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் சாந்தி புரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (47). இவரது கணவர் ரமேஷ், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துச் சென்றுவிட்டார். அந்த மன உளைச்சலில், அவரது மகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் லோகேஸ்வரன் (30) மத்திய நிறுவனமான ஆவடி எச்.வி.எப்., நிறுவனத்தில், ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், லோகேஸ்வரன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பரமேஸ்வரி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, லோகேஸ்வரன் படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அந்த அதிர்ச்சியில் பரமேஸ்வரி, அதே அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமுல்லைவாயில் போலீசார், இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த 4 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Thu Nov 16 , 2023
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. […]

You May Like