fbpx

மாதம் ரூ.36,000 சம்பளம்..!! SBI வங்கியில் சூப்பர் வேலை..!! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

வங்கியில் பணிபுரிய வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு சர்க்கிள் ஆபிசர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ. வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வட்ட அளவிலான அதிகாரி (CIRCLE BASED OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 1,422 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மாதம் ரூ.36,000 சம்பளம்..!! SBI வங்கியில் சூப்பர் வேலை..!! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI)

காலிப்பணியிடங்கள்: 1,422

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அடிப்படை சம்பளம்: ரூ. 36,000

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்படுவார்கள். எழுத்து தேர்வு என்பது கணினி வழி தேர்வாகும்.

எழுத்துத் தேர்வு: எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும். அவை கொள்குறி வகை வினாத் தேர்வு (Objective Test) மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வு (Descriptive Test) ஆகும்.

கொள்குறி வகை வினாத் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language – 30), கணினி திறனறிதல் (Computer Aptitude – 20) வங்கி தொடர்பான கேள்விகள் (Banking Knowledge – 40) மற்றும் பொது அறிவு மற்றும் பொருளாதாரம் (General Awareness / Economy – 30) ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 120 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான மொத்த கால அளவு மொத்தம் 2 மணி நேரம். 

இதனைத் தொடர்ந்து, 2ஆம் பகுதியான விரிவாக எழுதுதல் தேர்வு நடைபெறும். இதில் கட்டுரை அல்லது கடிதல் எழுதுதல் தொடர்பாக இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். இதற்கான கால அளவு 30 நிமிடங்கள். இந்த எழுத்துத் தேர்வு 2022 டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு:

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://sbi.co.in/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/17102022_Final+Advertisement.pdf/0399e3a4-4e16-af69-c270-f61c385d01a6?t=1666017092279 என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Chella

Next Post

இந்தியாவில் 1000-க்கும் கீழ் குறைந்தது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை...!

Mon Nov 7 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 937 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 09 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,047 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
இந்தியாவில் புதிய கொரோனா அலை உருவாகிறதா..? ’தப்பிக்கவே முடியாது’..!! ’மக்களே எச்சரிக்கையா இருங்க’..!!

You May Like