fbpx

மாதம் ரூ.95,000 வரை சம்பளம்..!! மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகத்தில் (Security Printing and Minding Corporation Of India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்த கழகத்தின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.

ஜூனியர் டெக்னீசியன் :

இந்த பணிக்கு மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். லேப் அசிஸ்டென்ட், கெமிக்கல் பிளான்ட் ஆப்பரேட்டர், பவுண்டரி மேன், புர்னாஸ் ஆபரேட்டர், மில்ரைட் மெயின்டெனன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் உள்ளிட்ட பாட பிரிவுகளின் கீழ் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.18,780 முதல் ரூ.67,390 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

சூப்பர்வைசர் :

இந்த பணிக்கு மொத்தமாக 7 பேர் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். மாஸ்டர் டிகிரியில் தமிழ் அல்லது ஆங்கிலம் முடித்தவர்கள், டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேசன் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.27,600 முதல் ரூ.95,910 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

லெபாரட்டரி அசிஸ்டென்ட் குரூப் 2 :

இந்த பணிக்கு மொத்தம் இரண்டு பேர் மட்டுமே செய்யப்பட உள்ளனர். பிஎஸ்சி கெமிஸ்ட்ரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.21,540 முதல் ரூ.77,160 வரை வழங்கப்படும்.

எங்க்ராவர் :

எங்கராவர் என்றால் மெட்டல் வொர்க்ஸ் என்று பொருள். இந்த பணிக்கு ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு இளங்கலை படிப்பில் பைன் ஆர்ட்ஸ் (மெட்டல் வொர்க்ஸ்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.29.910 முதல் ரூ.85,570 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

செக்ரடரியல் அசிஸ்டென்ட் :

இந்த பணிக்கும் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.23, 910 முதல் ரூ.85,570 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு :

இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இதில் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிகளுக்கு தகுதியான நபர்கள் igmhyderabad.spmcil.com இணையதளம் மூலம் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.650 செலுத்த வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.300 விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

Chella

Next Post

இன்னும் ஒரு மாதத்திற்குள் 10,000 பேருக்கு பதவி உயர்வு..!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வந்த ஜாக்பாட் அறிவிப்பு..!!

Wed Sep 13 , 2023
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 10,000 பேருக்கு பழைய கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நகராட்சி நிர்வாகத் துறை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறையில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு இனி பதவி உயர்வு என்பது புதிய விதிகளின்படியே நடைபெற போகிறது. இந்த புதிய விதிகள் 2023 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, பழைய கல்வித் தகுதி அடிப்படையில் பதவி […]

You May Like