fbpx

பதவியை பிடிக்க வசூல் வேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வைத்த வாட்சப் ஸ்டேட்டஸால் பரபரப்பான சேலம் மாவட்ட காவல்துறை…!

சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் தன்னுடைய whatsappல் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்தார். அதில் பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை என்ற தலைப்புடன் வாசகங்கள் இருந்தனர் மேலும் சேலம் மாநகர காவல் துறை ஆணையர் லாவண்யா சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு, ஓய்வு பெற்ற டிஜிபியிடம் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவியை பெற முயற்சி செய்தார் என்ற அதிர்ச்சி தகவலுடன் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் சிவகுமார். இந்த ஸ்டேட்டஸ் வைக்கப்பட்ட 3 நிமிடங்களிலேயே அந்த ஸ்டேட்டஸ் அகற்றப்பட்டது.

ஆனாலும் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தன்னுடைய வாட்ஸப்பில் சக அதிகாரி தொடர்பான தகவல்களுடன் ஸ்டேட்டஸ் வைத்தது காவல்துறையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு இடையேயும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மெமோ அனுப்பி இருக்கிறார். சேலம் மாநகர துணை ஆணையர் லாவண்யாவுக்கு எதிராக whatsapp ஸ்டேட்டஸ் வைத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு டிஜிபி உத்தரவு பிரப்பித்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

Next Post

மதுரை அருகே அதிமுக கவுன்சிலர் சரமாரியாக வெட்டிப் படுகொலை…..!

Mon Jul 17 , 2023
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருபவர் சந்திர பாண்டியன். இவரை மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் சிலரால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு விளைவாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. காவல்துறையினர் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் […]

You May Like