fbpx

ஒரே பாலின தம்பதிகளுக்கு அனுமதி!… கடவுளின் அன்பை பெறவிரும்பும் மக்களை தடுக்கக்கூடாது!… போப் பிரான்சிஸ்!

கடவுளின் அன்பையும், கருணையையும் பெற விரும்பும் மக்களை தடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கலாம் என்று போப் பிரான்சிஸ் அனுமதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வாட்டிகன் அலுவலகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடவுளின் அன்பையும், கருணையையும் தேடும் மக்கள் மத்தியில் திருமணத்தின் சடங்குடன், மற்ற சடங்கை குழப்பாமல் இருந்தால், சில சூழ்நிலைகளில் ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதங்களை வழங்கலாம். அதே சமயம் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வாழ்நாள் சடங்கு என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

எனவே திருமண நடைமுறைகளுடன் ஒரேபாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களை வழங்கக்கூடாது. அதற்காக அத்தகைய ஆசீர்வாதங்களுக்கான கோரிக்கைகளை முழுவதுமாக மறுக்கவும் கூடாது. ஒரு ஆசீர்வாதம் மக்களுக்கு கடவுள் மீது நம்பிக்கையை அதிகரிப்பதற்கான வழியை வழங்குகிறது. எனவே இது நாம் வாழும் உலகில் சிறிய விஷயமல்ல. இது பரிசுத்த ஆவியின் விதை, அது வளர்க்கப்பட வேண்டும், தடுக்கப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

Kokila

Next Post

நெல்லையை புரட்டி எடுத்த வெள்ளம்!… 696 கர்ப்பிணிகளை பாதுகாக்க ஆக்‌ஷனில் இறங்கிய ஆட்சியர்!… குவியும் பாராட்டுகள்!

Tue Dec 19 , 2023
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலியில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 696 கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதிகளில் உள்ள 24 கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த இரண்டு தினங்களாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டதையடுத்து, […]

You May Like