fbpx

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை.. மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது..

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையை கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தார்… இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது..

அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் வரம்பிற்கு உட்பட்டது அல்ல, என்று தெரிவித்தனர்.. மேலும் இந்த வழக்கில் விசாரிக்க எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்..

Maha

Next Post

மாணவனுக்கு விஷம் கொடுத்த வழக்கு..! மளிகைக் கடை அண்ணாச்சியால் வசமாக சிக்கிய மாணவியின் தாய்..!

Fri Sep 16 , 2022
காரைக்காலில் மகளின் படிப்புக்கு போட்டியாக இருந்த மாணவனை, சக மாணவியின் தாயாரே விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கொலை நடந்தது எப்படி என்பது போலீஸ் விசாரணையில் முழுமையாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவனை கொலை செய்ததாக மாணவியின் தாயார் சகாயராணி கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாகாயராணியை […]
மாணவனுக்கு விஷம் கொடுத்த வழக்கு..! மளிகைக் கடை அண்ணாச்சியால் வசமாக சிக்கிய மாணவியின் தாய்..!

You May Like