fbpx

சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

விருதுநகர் மாவட்டம் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் என்ற கோவில் உள்ளது. இக்கோவில் தரையிலிருந்து இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் என்ற சிறப்பு மிக்க கோவில் ஒன்று அமைந்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு மாத பௌர்ணமி, பிரதோஷ நாள் மற்றும் அம்மாவாசை தினங்களில் தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷம் நாட்கள் 5-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தாணிப்பாறை வனத்துறையின் கேட்டிற்கு அருகே வர வேண்டாம் எனவும் கூறியுள்ளனர். மேலும்,
இந்நிலையில் சென்ற மாத மழையின் காரணமாக அந்த மாதமும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Baskar

Next Post

டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கு..!! பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை உறுதி..!!

Thu Nov 3 , 2022
லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த 2000ஆம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் பழமை வாய்ந்த செங்கோட்டை மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிஃப். செங்கோட்டையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் முகமது ஆரிஃப் என்கிற அஷ்பக் […]
டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கு..!! பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை உறுதி..!!

You May Like