குவைத்தில் வேலை பார்த்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காப்பாற்றுமாறு கோரி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது…
சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த புவனா (37) இவரது கணவர் ஜேம்ஸ்பால். இவரது நண்பர் ஜான்சன் என்பவரின் அறிவுரைப்படி குழந்தை பராமரிப்பு வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சேர கூடுதல் பணம் அவசியம் இருக்காது எனக்கூறியதால் புவனா இந்த வேலைக்கு சென்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் ஒருமாத்திலேயே தண்டையார் பேட்டையில் உள்ள கணவருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் , ஒரு பெரிய குடும்பத்திற்கே வேலை செய்வதாகவும் 20 மணி நேரம் தம்மை வேலை வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அடித்து அவமானப்படுத்துவதோடு மட்டுமின்றி கழிவறையில் படுக்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மூக்கில் ரத்தம் வரும் அளவிற்கு தாக்கு கொடுமை படுத்துவதாகவும் சாப்பிடுவதற்கு உணவு கூட சரியாக தரவில்லை எனவும் கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது. கணவர்ஜேம்ஸ் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளார். தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கணியா பாபு மூலம் தூதரகத்தை தொடர்பு கொண்டனர். அப்போது எப்படியாவது தப்பி வந்து தூதரகத்தை அடைந்தால் நாங்கள் உரிய வசதியை ஏற்படுத்தி சென்னை திரும்ப ஏற்பாடு செய்கின்றோம் என தெரிவித்தனர்.
இது குறித்து புவனா தெரிவிக்கையில் , தான் பணியாற்றுவது காவல் அதிகாரி ஒருவரின் வீடு , ஒரு வேளை தப்பித்து வந்தால் என் மீது திருட்டு பழி சுமத்தி திருட்டு வழக்கு போடுவார்கள் என புவனா தெரிவித்துள்ளார். இதனால் எப்படியாவது மனைவியை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.