fbpx

Alert: எஸ்பிஐ உள்ளிட்ட 18 வங்கி வாடிக்கையாளர்களே…! உங்க தகவல்கள் திருடப்படலாம்…!

எஸ்பிஐ உள்ளிட்ட 18 வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகளை போலியான செய்தி மூலம் டிரினிக் என்னும் வைரஸ் உங்கள் தரவைத் திருடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உங்களது போனில் ஊடுருவி, வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் OTP போன்றவை முக்கியமான விவரங்களைத் திருடுவதற்கு ஏராளமான வைரஸ் சாப்ட்வேர்கள் உள்ளன. அதுபோன்ற ஒரு மால்வேர் இந்திய வங்கிகளையும் அவற்றின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை திருட மீண்டும் ஒரு மால்வேர் வந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 18 வங்கி வாடிக்கையாளர்களின் தரவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள “டிரினிக்” மால்வேரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை சைபர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வங்கிச் செயலிகளின் சேவை மூலம் இலக்காகக் கொண்டு “டிரினிக்” மால்வேர் செயல்படுகிறது. பயன்பாட்டிற்கான அணுகலைப் பெற்றவுடன், உள்நுழைவைத் தடுக்கவும், தரவைத் திருடவும் உள்வரும் அழைப்புகளை முடக்குகிறது. இந்த மால்வேர் எஸ்பிஐ உட்பட 18 வங்கிகளை குறிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த மால்வேர் தற்போது வருமான வரித்துறை செயலியாக மாறுவேடமிட்ட செயலியாக வந்துள்ளது. இது வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வரி மேலாண்மை பயன்பாடாகக் கூறப்படும் iAssist என்ற செயலியாக கிடைக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போன்களில் இந்த தவறான செயல்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த 3 மாவட்டத்தில் உள்ள மக்களே கவனம்...! கனமழை எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்...!

Mon Oct 31 , 2022
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடகிழக்கு பருவமழையொட்டி தமிழ்நாடு, கேரளா, தென் உள் கர்நாடகா, ஆந்திர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like